இந்தியாவை உலுக்கிய ரயில் விபத்து; மகனை கண்டுபிடிக்க உதவுங்கள்; தவிக்கும் தந்தை!
கோரமன்டல் எக்ஸ்பிரசின் 23 பெட்டிகளில் பத்து பெட்டிகளாவது பெரும் சேதத்தை சந்தித்துள்ளன.
ஹவ்ரா எக்ஸ்பிரசின் இரண்டு பெட்டிகள் தலைகீழாக காணப்படுகின்றன. மூன்று புகையிரதங்களின் பெட்டிகள் சிதைந்துபோன நிலையில் ஒன்றாக காணப்படுகின்றன.
சில பக்கவாட்டில் காணப்படுகின்றன-மற்றவை மிகவும் உயரமாக தூக்கிவீசப்பட்டதால் நிலத்தில் விழுந்தவேளை முற்றாக சேதமடைந்துள்ளன. பெட்டிகளிற்கு அருகில் உடல்கள் வெள்ளை துணியால் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன, அம்புலன்ஸ்கள் உள்ளுர் கார்கள் டிரக்டர்கள் மூலம் உள்ளுர் மருத்துவமனைகளிற்கு கொண்டு செல்லப்படுவதற்காக அவை காத்திருக்கின்றன.
இந்நிலையில் பயணிகளின் உடமைகள் காலணிகள் விளையாட்டு பொருட்கள் சிதறிக்காணப்படுகின்றன - சூட்கேஸ்கள் திறந்த நிலையில் காணப்படுகின்றன.
இது இரண்டு தசாப்தகாலத்தில் இந்தியா சந்தித்த மிகமோசமான புகையிரத விபத்தின் பின்னர் அந்த பகுதியில் காணப்படும் காட்சிகள் - வெள்ளிக்கிழமை இரவு கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு செல்லும் கொரமென்டல் எக்ஸ்பிரஸ் கிழக்கு இந்திய நகரான ஒடிசாவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த புகையிரதத்துடன் மோதியது.
நிறுத்திவைக்கப்பட்டிருந்த புகையிரதத்தின் சில பெட்டிகள் எதிர்தண்டவாளத்தில் பயணித்துக்கொண்டிருந்த ஹவ்ரா புகையிரதத்துடன் மோதின. சனிக்கிழமை காலை அளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 280ஐகடந்துவிட்டது.
900 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் ஆயிரக்கணக்கானவர்களின் உதவியுடன் மீட்பு பணிகள் தொடர்வதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மோப்பநாய்களையும் இரும்புகளை வெட்ட பயன்படுத்தப்படும் சாதனங்களையும் பயன்படுத்திசிதைவடைந்த பெட்டிகளிற்குள் சிக்குண்டுள்ளவர்களை மீட்க்கும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
விபத்தில் சிக்குண்டுள்ளவர்களி;ன் உறவினர்கள் அவசரஅவசரமாக விபத்து இடம்பெற்ற பகுதிக்கு விரைந்து தங்கள் உறவுகளை தேடிவருகின்றனர், அவர்களில் 53 வயது ரபீந்திரா சாவும் ஒருவர் அவர் சாலிமரிலிருந்து கொரமண்டல் எக்ஸ்பிரசில் பயணம் செய்த தனது மகன் கோவிந்தாவை தேடுகின்றார்.
தயவு செய்து எனது மகனை கண்டுபிடிக்க உதவுங்கள் - மகனின் உடலையாவது கண்டுபிடிக்க உதவுங்கள் என அவர் ஒவ்வொரு உடல்களாக பார்த்தபடி அவர் கதறுகின்றார். தனது மூத்த சகோதரர் அப்துல்சேக்கினையும் அவரது மகன் மெஹ்ராஜ் சேக்கினையும் மூன்று அயலவர்களையும் தேடுகின்றார் சேக் ஜாஹிர் ஹ_சைன் அவர்கள் அனைவரும் சாலிமர் எக்ஸ்பிரசில் சென்னைக்கு சென்றுகொண்டிருந்தவர்கள் - வேலைவாய்ப்பு தேடி புறப்பட்டவர்கள் .
இவ் விபத்து குறித்த செய்தியை கேட்டதை தொடர்ந்து நான் எனது சகோதரரை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றேன் என தெரிவித்த சேக் ஜாஹிர் ஹசைன் அவர்களின் தொலைபேசிகள் செயல் இழந்துள்ளன நான் மருத்துவமனையிலிருந்து மருத்துவமனையாக சென்றுகொண்டிருக்கின்றேன் இதுவரை எந்த தகவலும் இல்லை, விபத்து இடம்பெற்ற இடத்திற்கு சென்று அடுக்கிவைக்கப்பட்டிருந்த உடல்கள் மத்தியில் அவர்களை தேடினேன் 100 பேரின் முகங்களை பார்த்தேன் ஆனால் எனது உறவினர்கள் அயலவர்களை காணவில்லை என அவர் தெரிவிக்கின்றார்.