யாழில் பூப்புனித நீராட்டு விழா சென்று திரும்பியவர்களுக்கு நேர்ந்த சோகம்
யாழ்.நவாலியில் உறவினர் வீடொன்றில் பூப்புனித நீராட்டு விழாவில் கலந்துகொண்டுவிட்டு வீடு திரும்பிய இருவர் வேக கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதியுள்ளனர்.
இந்த சம்பவம் துணைவி பகுதியில் நேற்று இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்திருக்கின்றார்.
நவாலியில் உள்ள உறவினரின் வீட்டிற்கு பூப்புனித நீராட்டு விழாவிற்கு சென்றுவிட்டு தங்களது வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த இளைஞர்களது மோட்டார் சைக்கிள் துணைவி வீதியில் உள்ள மரத்துடன் மோதியுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் பின்னால் இருந்த இளைஞன் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் அராலி - செட்டியார் மடம் பகுதியைச் சேர்ந்த புலேசாந் என்ற 22 வயது இளைஞனே உயிரிழந்துள்ளார்.
விபத்து சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.