நீராட சென்ற மாணவனுக்கு நேர்ந்த துயரம்
லுணுகலை பிரதேச ஆற்றில் மூழ்கி 16 வயது மதிக்கத்தக்க பாடசாலை மாணவரொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று வியாழக்கிழமை (18) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், உயிரிழந்த மாணவனும் அவருடைய நண்பர்கள் இருவரும் ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த வேளை, திடீரென ஏற்பட்ட சுழியில் சிக்குண்டு நீரினுள் இழுத்துச் செல்லப்பட்ட மாணவன் கற்பாறைக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.
மாணவனின் சடலம் அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டு ஹொப்டன் ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்த மாணவன் தரம் 10 இல் கல்வி பயின்று வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லுனுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.