முச்சக்கரவண்டி மரத்துடன் மோதியதில் சாரதிக்கு நேர்ந்த சோகம்
வெருகலில் வீதியோரத்தில் காணப்பட்ட மரம் ஒன்றில் முச்சக்கரவண்டி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
வெருகல் - பூநகர் பகுதியில் இன்றைய தினம் (03) அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டி சாரதி
வெருகல் முருகன் ஆலயத்துக்கு சவாரி சென்று மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது பூநகர் பகுதியில் வைத்து தூக்க கலக்கத்தில் வீதியோரம் நின்ற மரத்தின் மீது வாகனத்தை மோதியுள்ளார்.
உயிரிழந்த நபர் இந்த விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது.
உயிரிழந்த நபர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான தியாகராசா ஜெயச்சந்திரன் (வயது 41) என்பவர் ஆவார்.
இந்நிலையில் சடலம் திருகோணமலை வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைகளுக்காக கொண்டுசெல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.