சுவிட்சர்லாந்தில் தமிழ் சிறுமி மரணம் - சோகத்தில் குடும்பம்
சுவிட்சர்லாந்தில் யாழ்ப்பாணம் வடமராட்சியை பூர்வீகமாக கொண்ட 13 வயது சிறுமி ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்து பாடசாலை ஒன்றில் கல்விபயிலும் குறித்த மாணவி கடந்த திங்களன்று, பாடசாலை முடிவடைந்த பின்னர் உடற்பயிற்சி நிலையம் சென்றுள்ளார்.
அங்கு உடற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி மேற்கொள்ளும் போது குறித்த மாணவி திடீரென மயக்கமுற்று வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த சிறுமியின் உயிரிழப்பு சுவிஸ்வாழ் தமிழர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.