கோயில் திருவிழாவில் நேர்ந்த அசம்பாவிதம் ;மூவர் பலி, பலர் படுகாயம்
India
Death
Odisha
By Viro
இந்தியாவின், ஒடிசாவில் உள்ள பூரி ஜகன்நாதர் ஆலயத்தின் ரத யாத்திரையின் போது, இன்று அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மூவர் உயிரிழந்ததுடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
உயிரிழந்தவர்களில் 2 பெண்களும், 70 வயதுடைய ஆணொருவரும் அடங்குவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 27 ஆம் திகதி ஆரம்பமாகி, எதிர்வரும் ஜூலை 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த வருடாந்திர விழாவின் மூன்றாவது நாளில் இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.
குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US