யாழ்ப்பாணத்திற்கு முன்னெடுக்கப்பட்ட கடத்தல் முறியடிப்பு
யாழ்ப்பாணத்திற்கு சுமார் 20 இலட்ச ரூபாய் பெறுமதியான தேக்க மரத்தினை கடத்தி வந்த சாரதியை பொலிஸார் கைது செய்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
வன்னி பகுதியில் இருந்து பாரவூர்தி ஒன்றில் சட்டவிரோதமான முறையில் மரத்தினை கடத்தி வந்து மீசாலை பகுதியில் உள்ள மரஆலையில் அவற்றை இறங்குவதாக சாவகச்சேரி பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பாரவூர்தியை கைப்பற்றியதுடன், அதனுள் இருந்த 52 தேக்க மர குற்றிகளையும் கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸார் பாரவூர்தி சாரதியை கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்றதுடன், கைப்பற்றப்பட்ட பாரவூர்தி மற்றும் மரக்குறிகளையும் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட மர குற்றிகளின் பெறுமதி சுமார் 20 இலட்ச ரூபாய் என தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
