மூன்றாவது கண்ணில் சிக்கியவர்களுக்கு எச்சரிக்கை!
கொழும்பு வீதிகளில் நேற்று திங்கட்கிழமை (22) சிசிரிவி கமரா மூலம் கண்காணிக்கப்பட்ட 125 போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் சிசிரிவி கமரா மூலம் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணித்து வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் முன்னோடித் திட்டம் நேற்று ஆரம்பமானது.
125 போக்குவரத்து விதிமீறல்கள்
அதன்படி, கொழும்பில் சிசிரிவி கமரா மூலம் 125 போக்குவரத்து விதிமீறல்கள் இனங்காணப்பட்டதாக தெரிவித்துள்ள பொலிஸ் தலைமையகம், ஆரம்பக் கட்ட நடவடிக்கையாக அந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் இனங்காணப்பட்ட விதி மீறல்களில் பிரதானமாக பாதையை மாற்றியமை மற்றும் தரிப்பு பகுதிகளில் நிறுத்தாமல் வாகனம் செலுத்தியமை போன்ற தவறுகள் அவதானிக்கப்பட்டுள்ளன.