ஜூன் மாதத்தில் நாட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!
ஜூன் மாதத்தின் முதல் 20 நாட்களில் நாட்டுக்கு 61,183 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தரவுகள் தெரிவித்துள்ளன.
அதேவேளை ஜூன் மாதத்தில் 87,521 சர்வதேச பார்வையாளர்களை கவர்ந்திழுப்பதை சுற்றுலாத்துறை இலக்காகக் கொண்டுள்ள நிலையில், தனது இலக்கில் 70 சதவீதத்தை அடைந்துள்ளது.
இந்தியாவில் சுற்றுலாப் பயணிகளே அதிகம்
இந்நிலையில் ஜூன் 21 - 30 காலப்பகுதியில் 26,338 சுற்றுலாப் பயணிகளைக் கொண்டு வர வேண்டும். அதற்கு நாளாந்தம் சராசரியாக 2,633 பேர் வருகை தரவேண்டும்.
இந்த ஆண்டில் ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 20 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 585,669 சுற்றுலா பயணிகள் வரை நாட்டுக்குள் வந்துள்ளனர். வாரத்தில் இரண்டு வருகைகள் 20,541 ஆக அதிகரித்துள்ளது.
மூன்றாவது வாரத்தில், சுற்றுலாப் பயணிகளின் வருகை சற்று மேம்பட்டு 20,986 ஆக இருந்தது. இக்காலப்பகுதியில் இந்தியாவில் இருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர்.
இரண்டாம் இடத்தில் ரஷ்யா சுற்றுலாப் பயணிகளும், மூன்றாவது இடத்தில் உள்ள ஐக்கிய இராச்சியத்திலிருந்து 7 சதவீதம் பேர் வருகை தந்துள்ளார்கள். அதேசயம் தரவரிசையில் அவுஸ்திரேலியா நான்காவது இடத்திலும், சீனா ஒரு தரவரிசை முன்னேறி ஐந்தாவது இடத்திலும் உள்ளது.
மேற்குறித்த நாடுகள் தவிர , கனடா, ஜேர்மனி, அமெரிக்கா, மாலைதீவுகள் மற்றும் பிரான்ஸ் ஆகியவை ஆகிய நாடுகளின் சுற்றுலாப்பயணிகளும் நாட்டுக்கு வந்துள்ளதாக சுற்றுலா அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.