நாளை அட்சய திருதியை; தங்கம் வாங்கலாமா? நிபுணர்கள் கூறுவது என்ன?
கொரோனாவுக்கு மத்தியிலும் நாளை அட்சய திருதியை கொண்டாடப்படவுள்ளது. அட்சய திருதியை அன்று எப்போதும் கடைகளில் சென்று நகை வாங்கும் மக்கள், கடந்த ஆண்டு முதல் தங்கத்தினையும் ஆன்லைனில் வாங்க பழகிக் கொண்டுள்ளனர்.
அட்சய திருதியை நாளில் பிடித்தமான தங்கத்தில் முதலீடு என்பது மிக நல்ல விஷயம். இந்திய சந்தையினை பொறுத்த வரையில் கடந்த இரண்டு அமர்வுகளாக தங்கம் விலையானது குறைந்து வருகின்றது. தற்போது சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்து 1821 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது.
எம்சிஎக்ஸில் கடந்த இரு அமர்விலேயே சற்று சரிவினைக் கண்டு இருந்த நிலையில், இன்று மாலை இன்னும் சரியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது, கடந்த வாரம் முழுக்க தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வந்த நிலையில், கடந்த சில அமர்வுகளாக குறைந்து வருவது, அட்சய திருதியைக்கு வாங்க நினைப்பவர்களுக்கு நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில் அட்சய திருதியைக்கு வாங்க நினைப்பவர்களுக்கும், குறைந்த விலையில் தங்கம் வாங்குவதற்கும் இது சரியான வாய்ப்பே. இது ஒரே கல்லில் இரு மாங்காய் எனலாம். ஏனெனில் விலையும் குறைவு. அதே நேரம் குறைந்த விலையில் அட்சய திருதியைக்கும் வாங்கலாம்.
அமெரிக்க நுகர்வோர் விலை குறையீடு சந்தைக்கு சாதகமாக வந்த நிலையில், டாலரின் மதிப்பு வலுவானது. இதனால் சந்தையில் தங்கம் விலையானது சரிவினைக் கண்டது. அதோடு பணவீக்க விகிதமும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தங்கம் ஒரு சிறந்த ஹெட்ஜிங் பார்க்கப்படுகிறது. ஆக முதலீட்டு நோக்கில் வாங்கினாலும் சரி, சம்பிரதாயங்களுக்காக வாங்கினாலும் நிச்சயம் லாபம் என்பது உறுதி.
அதோடு தங்கத்தின் மீடியம் டெர்ம் லெவல் 46,800 - 48,000 ரூபாயாகும். இதே நீண்டகால நோக்கில் 55.000 - 60,000 ரூபாய் செல்லலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கிடையில் நிபுணர்கள் தங்கத்தினை வாங்கவே பரிந்துரை செய்கின்றனர்.
ஏனெனில் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம். ஆக குறைந்த விலையானது முதலீட்டாளர்களுக்கு வாங்க நல்ல வாய்ப்பு என நிபுணர்கள் கூறுகின்றனர்.