கண்டியில் இன்று 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம்
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று (19) கண்டியில் விசேட ஊர்வலம் இடம்பெறவுள்ளது.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இருந்து மாலை 6.30 மணிக்கு ஊர்வலம் ஆரம்பமாகி தலதா வீதி, யட்டிநுவர வீதி, ராஜ வீதி வழியாக பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேண்டுகோளுக்கு இணங்க மல்வத்து மற்றும் அஸ்கிரி மகா நாயக்க தேரர்களின் ஆலோசனையின் பேரில் ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேகளும், சதர மகா தேவாலய நிலமேகளும் இணைந்து இதனை நடத்துகின்றனர்.
ஊர்வலம்
இந்த ஊர்வலத்தில் 35 யானைகள் மற்றும் 45 நடனக் குழுக்கள் பங்கேற்கின்றன. தூதர்கள், உயர்ஸ்தானிகர்கள் உட்பட உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர்.
ஊர்வலம் காரணமாக இன்று பிற்பகல் கண்டி நகரில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் மற்றும் போக்குவரத்து திட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளது.