சட்டவிரோத துப்பாக்கிகள் தொடர்பில் தகவல் கொடுப்பவர்களுக்கு சம்மானம்!
சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகளை கண்டுபிடிக்க உதவும் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் தனிப்பட்ட தகவல் கொடுப்பவர்களுக்கு வழங்கும் சன்மானத் தொகையை அதிகரிக்க பொலிஸ்மா அதிபர் தீர்மானித்துள்ளார்.
இந்த திட்டம் ஜூன் 25 முதல் ஜூலை 31 வரை நடைமுறையில் இருக்கும் என பொலிஸார் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த காலங்களில் பதிவாகிய சில குற்றச்செயல்கள் சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகள் நாட்டில் புழக்கத்தில் இருப்பதைக் காட்டுவதாக பொலிஸ் மா அதிபர் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.
இந்த நிலைமை சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதற்கு தடையாக இருப்பதுடன் பொதுமக்கள் அச்சமின்றி வாழக்கூடிய அமைதியான சூழலை ஏற்படுத்துவதாக பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் பொலிஸ் மா அதிபர் வெளியிட்டுள்ள முழுமையான அறிவித்தல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.