மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வருடாந்த பெருவிழா; திருக்கல்யாண உற்சவம்
இலங்கையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க பஞ்ச ஈச்சரங்களில் ஒன்ற்றாக திகழும் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வருடாந்த பெருவிழாவின் விசேட திருவிழாவான திருக்கல்யாண உற்சவம் நேற்று வெள்ளிக்கிழமை (6) மாலை வெகு விமர்சையாக இடம்பெற்றது.
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வருடாந்த பெருவிழா கடந்த மாதம் 31 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இருந்தது.
கொடியேற்றத்தை தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற நிலையில், நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (6) இரவு விசேட திருவிழாவான திருக்கல்யாண உற்சவம் மிக விமர்சையாக ஆலயத்தின் பிரதம குரு தியாகராஜா கருணானந்த குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிலையில் எம்பெருமானில் திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அதேவேளை நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை (8)தேர்த்திருவிழாவும், அதனைத் தொடர்ந்து தீர்த்த உற்சவமும் இடம்பெற உள்ளது .