பல இலட்சம் பெறுமதியான ஜெனரேட்டரை திருடியவர்கள் கைது
ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான 90 கிலோவாட் மின்பிறப்பாக்கியை (ஜெனரேட்டர்) திருடியதாக சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் நேற்று (24) லொறி ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தலாவ, கலேவெல பகுதியைச் சேர்ந்த 31, 34, 44 மற்றும் 24 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தகெட்டிய, பல்லேவெல பகுதியில் உள்ள கொன்கிரீட் வேலைகளுக்கு மின்சார உற்பத்திக்காக நிறுவப்பட்ட ஜெனரேட்டர் திருடப்பட்டு லொறியில் கொண்டு செல்லப்படுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் கண்காணிப்பாளர் வசந்த கந்தேவத்தவின் ஆலோசனையின் பேரில், கந்தகெட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.ஜி. ஜெயதுங்க தலைமையில் பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சந்தேக நபர்களை பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.