மட்டக்களப்பில் மர்மநபர்களின் சுவரொட்டியால் பரபரப்பு
மட்டக்களப்பு காந்தப் பூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலளார்களின் நினைவுத்தூபியில் அமலராஸ் அமலநாயகிக்கு எதிராக மர்ம நபர்களால் சுவரொட்டியொன்று ஒட்டப்பட்ட சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மட்டக்களப்பில் இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவி அமலராஸ் அமலநாயகியினால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மர்மநபர்களால் ஒட்டப்பட்ட சுவரொட்டி
இந்நிலையில் மர்மநபர்களால் ஒட்டப்பட்ட சுவரொட்டியில் ” நமக்கான டொழரை(டொலரை)பெற பேரணியில் கலந்துகொள்ள வாருங்கள் ” எனக் குறிப்பிடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சுவரொட்டி குறித்து கண்டனம் தெரிவித்துள்ள ஊடகவியலாளர்கள், வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட சங்கத்தின் மட்டக்களப்பு தலைவிக்கும் ஊடகவியலளார்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக இது உள்ளதாக சுட்டிக்காட்டியதுடன் , விசமிகள் இவ்வாறான செயல்களை கைவிட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர்.