போரைவிட விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாட்டில் கடந்த பத்து ஆண்டுகளில் விபத்துகளால் ஏற்பட்ட உயிரிழப்பே அதிகமாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன.
கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் வீதி விபத்தில் 27,000 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் கூறிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் வீதி விபத்துகளில் 27,000 பேர் உயிரிழந்துள்ளனர். இது கடந்த 30 வருடங்களில் ஏற்பட்ட போர் உயிரிழப்புகளை காட்டிலும் மிகவும் அதிகம் என தெரிவித்துள்ளார்.
இவ்வருட ஜனவரி முதல் தற்போது வரையில் 1,760 பேர் வீதி விபத்தில் உயிரிழந்தனர்.
இந்த உயிரிழப்புகள் அனைத்தும் போக்குவரத்து விதிமீறல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட காரணங்களால் ஏற்பட்டவையாகும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.