இன்று இடம்பெற்ற கோர விபத்து; நால்வருக்கு நேர்ந்த துயரம்
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையில் இன்று இடம்பெற்ற கோர விபத்துச் சம்பவத்தில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
கல்முனை பக்கமிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தும், மட்டக்களப்பு பக்கமிருந்து கல்முனை பக்கம் பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியுள்ளது.
விபத்துக்குள்ளான காரில் தாய், தந்தை, மற்றும் அவர்களுடை இரு பிள்ளைகளும் பயணித்துள்ளனர்.
இந்நிலையில் காரில் பயணித்த நால்வரும், பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.