உணவு டெலிவரி பையில் மம்மியை வைத்திருந்த நபர்!
பெரு நாட்டை சேர்ந்த ஜூலியோ சீசர் பெர்மேஜோ (26) என்பவர் உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்து வந்தார்.
இவர் தனது நண்பர்களுடன் ஒரு பூங்காவில் மது அருந்தி கொண்டு இருந்த போது அங்கு வந்த பொலிஸார் அங்கு வைத்திருந்த உணவு டெலிவரி பையை திறந்து பார்க்கும் போது அதில் மம்மி உடல் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
இது தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்ட பொழுது இந்த மம்மியை அவரது தந்தை 30 வருடங்களுக்கு முன்னால் வீட்டில் கொண்டு வந்து வைத்திருந்ததாக கூறியுள்ளார்.
சீசர் பெர்மேஜோ அந்த மம்மியை "தனது ஆன்மீக காதலி" என்றும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு அவர் அந்த ம்மையோடு உரையாடுவதாகவும் அதனை தனது நண்பர்களுக்குக் காட்டுவதற்காகவும் எடுத்துச் சென்றதாகவும் கூறி உள்ளார்.
இதனை அடுத்து அவரிடமிருந்த பொலிஸார் அதனை தொல் பொருள் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தனர்.
மம்மியை ஆராய்ச்சி செய்த கலாச்சார அமைப்பு வெளியிட்ட தகவலில் மம்மி இறந்த ஆண் நபரின் உடலாகும்.
600 முதல் 800 ஆண்டுகள் பழமையானது என மஹிஸ்பானிக் காலத்திற்கு முந்தைய மம்மி. இந்த மம்மி குறைந்தது 45 வயதுடைய மனிதனுடையதாக இருக்கலாம் எனக் கூறப்பட்டு உள்ளது.
மேலும் மம்மி பண்டைய கால பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் அருங்காட்சியகத்திற்கு எடுத்துச் செல்லப்பட உள்ளதாக பெரு அரசு கூறியுள்ளது.