பொலிஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!
பொலிஸ் நிலையத்திற்குள் தனக்கு தானே தீ மூட்டிய நபர் ஒருவர் மனைவியும் எரிக்க முயற்சித்த நிலையில் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் மிரிஹான பொலிஸ் நிலையத்துக்குள் நேற்றுமுன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது.
மிரிஹான தலைமையக பொலிஸாரின் முறைப்பாடு பிரிவில் சந்தேக நபர் தன்னிடமிருந்த லைட்டரை பற்றவைத்து தனது உடலுக்கு தீவைத்துள்ளார்.
அத்துடன் அருகிலிருந்த மனைவியைக் கட்டிப்பிடிக்க முற்பட்டதையடுத்து அந்தப் பெண் பிரதான வாயிலுக்கு வெளியே ஓடி வந்து உயிரை காப்பாற்றியுள்ளார்.
இந்த நிலையில் தீக்காயங்களுக்கு உள்ளான நபர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை மனைவி மீது அசிட் வீசிய குற்றத்துக்காக அந்த நபருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாகவும், சட்டவிரோத போதைப்பொருள் வைத்திருந்ததாக மூன்று உயர்நீதிமன்ற வழக்குகளும் சந்தேகநபர் மீது நிலுவையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.