காதல் தொடர்பால் ஏற்பட்ட பயங்கரம்; மூவர் உயிரிழப்பில் பகீர் பின்னனி
இன்று அதிகாலை கட்டுகஸ்தோட்டை-பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாப்புகட வத்த பிரதேசத்தில் மூன்று பேரை பலியெடுத்த தீ விபத்துக்கான காரணம் தெரியவந்துள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்த யுவதிக்கும் இளைஞருக்குமிடையிலான காதல் தொடர்பே தீபரவலக்கான காரணம் என்றும், சம்பவத்தில் உயிரிழந்த இளைஞனே தீயை வைத்திருப்பதாக ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை (24) குறித்த வீட்டுக்கு வருகைத் தந்த இளைஞன், வீட்டுக்குள் எவரும் செல்ல முடியாத வகையில் கதவுகளை பூட்டி, தீயை வைத்துள்ளமை தெரியவந்துள்ளது.
அத்துடன் குறித்த இளைஞன் ஏதோ ஒருவகையான திரவத்தை வீட்டுக்குள் வீசியுள்ளதாக வைத்தியசாலையில் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ள யுவதியின் தாய் வாக்குமூலமளித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை சம்பவத்தில் காதலனான இளைஞன், யுவதி மற்றும் யுவதியின் தந்தை ஆகியோர் உயிரிழந்த நிலையில் , தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் காதல் தொடர்பால் மூவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்புடைய செய்தி
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேருக்கு நேர்ந்த பெரும் துயரம்