நான்காவது இளைஞரும் பரிதாபமாக உயிரிழந்தார்
Kegalle
Sri Lanka Police Investigation
Hospitals in Sri Lanka
By Sulokshi
கேகாலை- ரங்வலயில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வந்த நான்காவது இளைஞரும் உயிரிழந்துள்ளார்.
கடந்த 9ஆம் திகதி, கேகாலை- ரங்வலயில் இடம்பெற்ற விபத்தில் 27 வயதான 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அத்துடன் சம்பவத்தில் மேலும் 2 இளைஞர்கள் கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்தனர்.
இந்த நிலையில், சிகிச்சைப் பெற்று வந்த 27 வயதான எம்.எச்.எம். அல்பாப் என்ற இளைஞர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்துடன் தொடர்புடைய 18 வயது சாரதி கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US