குடும்ப தகராறால் நேர்ந்த கொடூரம்
யாழ்.வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் இன்று(19) மாலை மூவர் மீது மோசமான தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
குடும்ப தகராறின் காரணமாக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நபர் ஒருவர் தனது தந்தை , சகோதரன், சகோதரனின் மகன் மீது தாக்குதல் நடாத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
தாக்குதல் சம்பவம்
சந்தேக நபருடன் வவுனியாவிலிருந்து வாகனத்தில் வருகை தந்த தாக்குதல் கும்பல் வாகனத்திற்குள் வாள்களை மறைத்து வைத்திருந்துடன் வீட்டிற்குள் புகுந்து கம்பி, கற்களால் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயங்களுக்குள்ளான மூவரும் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இருவர் மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.