யாழில் இரு சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்!
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவில் வசிக்கும் 15 வயதான இரண்டு சிறுமிகள், வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சிவராத்திரி அன்று வீட்டிலிருந்தவர்கள் கோயிலுக்கு சென்றிருந்த நிலையில் 15 வயதான சிறுமியொருவர் மாத்திரமே வீட்டில் தனித்து தங்கியிருந்தார்.
குடும்பத்தினர் கோவிலில் இருந்து வீடு திரும்பிய போது, வீட்டுக்குள்ளிருந்து நபர் ஒருவர் தப்பியோடிய நிலையில் குறித்த நபர் சிறுமியை வல்லுறவுக்கு உள்ளாக்கியமை தெரிய வந்தது.
சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞர்
பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை, சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசித்த மற்றொரு 15 வயதான சிறுமி 23 வயதான கோப்பாய் இளைஞன் ஒருவர் அழைத்து சென்று குடும்பம் நடத்திய நிலையில் இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த சிறுமியும் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அதேவேளை யாழில் இவ்வாறான சமூக சீர்கேடான சம்பங்கள் அண்மைக்காலங்களில் அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.