ஹட்டன் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பதற்றம்!
ஹட்டன் பெட்ரோல் நிரப்பும் நிலையத்தில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நின்றவர்களுக்கு இடையே முறுகல் நிலை ஏற்பட்டதனால் அங்கு பதற்றமான சூழ்நிலையொன்று ஏற்பட்டுள்ளனர்.
ஹட்டன் நகரிலுள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு, ஒரு வாரத்துக்குப் பின்னர் இன்று (04) அதிகாலை இரண்டு மணியளவில் பெட்ரோல் பௌசர் வந்த நிலையில் அதிலிருந்து இறக்கப்பட்ட எரிபொருள் மக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒரு சிலர் தங்களுக்கு நெருக்கியவர்களை வரிசையின் இடையில் புகுத்துவதற்கு முற்பட்டதன் காரணமாகவும்,ஒரு சிலர் வரிசையில் வராது பெற்றோல் பெற்றுக்கொள்ள முற்பட்டதன் காரணமாகவும் இந்த முறுகல் நிலை ஏற்பட்டது.