சிவில் உடையில் பொலிஸாரை வழிநடத்தும் தேசபந்து தென்னகோன் ?
பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள தேசபந்து தென்னகோன், பாதுகாப்பு அமைச்சிலிருந்து பொலிஸாரை, சிவில் உடையில் வழிநடத்திச் செல்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச,
இந்த செயற்பாடு வெட்கமற்ற மற்றும் சட்டவிரோதமான செயல் எனவும் கூறினார் இதற்கு பதிலளித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன்,
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஒருபோதும் சீருடையுடன் அல்லது சிவில் உடையில் பாதுகாப்பு அமைச்சுக்கு வரமாட்டார் என கூறினார்.
அதோடு தவறான அறிக்கைகளை வெளியிட்டு நாட்டை தவறாக வழிநடத்துவதையும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கண்டித்துள்ளார்.