தந்தை திட்டியதால் உயிரை மாய்த்த பதின்ம வயது மாணவி
மெதகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பக்கினிகஹவெல 14 ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி தனது தந்தை தந்தை , தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
குறித்த சிறுமி 10 ஆம் வகுப்பில் கல்வி கற்று வருவதுடன் திங்கட்கிழமை (08) அன்று ஆடைகளை தைப்பதற்கு நகரத்திற்கு சென்று, வீட்டிற்கு தாமதமாக வந்ததற்காக அவளுடைய தந்தை திட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.

மருத்துவமனையில் அனுமதி
சிறுமி விஷம் அருந்தியுள்ளதுடன் பின்னர், மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (09) அன்று உயிரிழந்துள்ளார்.
மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை புதன்கிழமை (10) அன்று மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மெதகம பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.