யாழில் பதுங்கியிருந்த பதின்ம வயது காதலர்கள்; பொலிஸார் அதிரடி!
சிறுவயது காதலர்கள், நீதிமன்றினால் தண்டிக்கப்பட்ட பின்னரும் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறி பிறிதொரு இடத்தில் தங்கியிருந்த வேளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த 18 வயது இளைஞனும் , 16 வயது சிறுமியும் காதலித்து வந்த நிலையில் கடந்த 06 மாத கால பகுதிக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
பிரித்துவிட்ட நீதிமன்றம்
அவ்வேளை காதலர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். நீதிமன்ற விசாரணைகளை அடுத்து, இளைஞனுக்கு 3 மாத கால சிறைத்தண்டனை விதித்த மன்று , சிறுமியை சீர்த்திருத்த பள்ளியில் சேர்க்குமாறு கட்டளையிட்டது.
அந்நிலையில் இருவரது தண்டனை காலங்களும் நிறைவடைந்து தமது வீடுகளுக்கு திரும்பிய நிலையில் , மீண்டும் இருவரும் தமது வீட்டை விட்டு வெளியேறி , யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் தங்கிருந்துள்ளனர்.
இது தொடர்பில் தகவல் அறிந்த பொலிஸார் இருவரையும் கைது செய்து , பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.