இலங்கை வான்பரப்பில் வட்டமிட்ட துருக்கி விமானம்; பாதுகாப்பாக தரையிறங்கியது
Update : தொழில்நுட்பக் கோளாறால் சிலாபத்திற்கு மேலே 2 மணி நேரம் சுற்றிய துருக்கிய ஏர்லைன்ஸ் கொழும்பு-இஸ்தான்புல் விமானம் TK733, பாதுகாப்பாக கொழும்பு விமான நிலையத்தில் இல் தரையிறங்கியது
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட துருக்கி ஏர்லைன்ஸ் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்கவிலேயே அவசரமாகத் தரையிறங்க முயற்சித்து வருகின்றது.
விமானத்தின் தரையிறங்கும் சக்கரப் பகுதியில் (Landing Gear) ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது குறித்த விமானம், எரிபொருளைக் குறைப்பதற்காக விமான நிலையத்திற்கு மேலேயுள்ள வான்பரப்பில் வட்டமிட்டுக்கொண்டிருப்பதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிக எரிபொருளுடன் அவசரமாக தரையிறக்கும் போது ஏற்படக்கூடிய அனர்த்தங்களை தவிர்ப்பதற்காகவே, எரிபொருளை தீர்க்கும் முயற்சியில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.