பாதசாரி கடவையில் மகளுடன் சென்ற ஆசிரியை பலி
பாதசாரி கடவையில் தனது மகளுடன் பயணித்த முன்பள்ளி ஆசிரியை ஒருவர் கார் மோதியதில் உயிரிழந்துள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அந்த விபத்து நடந்தவுடன் கார் தப்பிச்சென்றுவிட்டதாக கூறப்படும் நிலையில், விபத்தில் காயமடைந்த 12 வயதுடைய சிறுமி களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் நாகஹவத்த மாவத்தை, பொல்கஸ்ஸோவிட்ட ஹல்பிட்ட பகுதியைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியையான புஷ்பிகா செவ்வந்தி நாகந்தல (வயது 38) என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த முன்பள்ளி ஆசிரியை பிலியந்தலையில் இருந்து பேருந்தில் வந்து ஹல்பிட்ட பகுதியில் இறங்கி பாதசாரி கடவையை கடக்கும்போது கஹதுடுவவிலிருந்து கெஸ்பேவ நோக்கி சென்ற கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.