பூசா சிறைச்சாலையில் தாக்கப்பட்டு தமிழ் கைதி உயிரிழப்பு
Sri Lankan Tamils
Department of Prisons Sri Lanka
Death
Prisons in Sri Lanka
By Sulokshi
13 days ago

Sulokshi
Report
Report this article
காலி, பூசா சிறைச்சாலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர் 46 வயதுடைய நந்த குமார் சிவானந்தா என அடையாளம் காணப்பட்டுள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி, சக கைதி ஒருவரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர் உடலில் 11 இடங்களில் கூரிய ஆயுதத்தினால் குத்தப்பட்ட காயங்கள் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறையில் அண்மையில் நடந்த சோதனை அல்லது போதைப்பொருள் தொடர்பான மோதல் இந்த மரணத்துடன் தொடர்புடையதா என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
மேலும் சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US