கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணப்பொதிகளுக்கு குறிச்சொற்கள்!
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு முன்னிட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறும் பயணிகளுக்கு தங்களது பயணப்பொதிகளை இலகுவாக அடையாளம் காண பயன்படுத்தப்படும் "டாக்" குறிச்சொற்கள் விமான நிலைய பொலிஸ் அதிகாரிகள் சோதனையிட ஆரம்பித்துள்ளனர்.
சில விமானப்பயணிகள் தங்களது பயணப்பொதிகளுக்கு மாறாக வேறொரு பயணப்பொதிகளை எடுத்துச் செல்வது தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றது.
"டாக்" குறிச்சொற்கள்
இவ்வாறு மாற்றப்பட்டு எடுத்து செல்லப்பட்ட பயணப்பொதிகள் மீண்டும் அடிக்கடி விமான நிலையத்திற்குத் திரும்புகின்ற நிலையில் அவைகளின் உரிமையாளர்களுக்கு வழங்குவது மிகவும் கடினமாக உள்ளது.
இந்நிலையில் அதனை தடுக்கும் முகமாக இப் புதிய "டாக்" குறிச்சொற்கள் முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேரும் பயணிகளின் பயணப் பொதிகளின் "டாக்" குறிச்சொல் சீட்டுகளை சோதனையிடும் நடவடிக்கையில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.