தாயுடன் சென்ற சிறுவன் பரிதாப பலி
வவுனியா, பாவற்குளத்திற்கு தாயுடன் நீராடச் சென்ற 4 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக உளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா, சூடுவெந்தபுலவு பகுதியில் வசித்து வரும் தாய் ஒருவர் தனது பிள்ளைகளுடன் பாவற்குளம் குளத்திற்கு நீராடச் சென்றுள்ளார்.
இதன்போது 4 வயது சிறுவனை குளத்தில் நீராட விட்டு விட்டு தாய் கரைக்கு வந்து திரும்பிய வேளை குளத்திற்குள் சென்ற நீராடிக் கொண்டிருந்த சிறுவனை காணவில்லை. இதனையடுத்து பதறிய தாயார் அங்கு நின்றவர்கள் மற்றும் ஊரவரை அழைத்து சிறுவனை தேடிய போது சிறுவன் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டார்.
மீட்கப்பட்ட சிறுவன் உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.
சம்பவத்தில் வவுனியா, சூடுவெந்தபுலவு பகுதியைச் சேர்ந்த அம்ஜத் என்ற 4 வயது சிறுவனே உயிரிழந்த நிலையில் , உளுக்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.