மகனின் மரண விசாரணையில் சந்தேகம்; தாயார் விடுத்த கோரிக்கை
மட்டக்களப்பில் கடந்த 3ம் திகதி சந்திரன் விதுஷன் எனும் இளைஞன் பொலிஸரால் கைது செய்யப் பட்ட நிலையில் மறுநாள் காலை சடலமாக மீட்கப் பட்டு இருந்தார் . இந்நிலையில் தனது அண்ணனை பொலிஸார் அடித்துக் கொன்றதை நான் என் கண் முன்னே பார்த்தேன் என அவரின் சகோதரி தெரிவித்திருந்தார் .
எனது அண்ணனுக்கு நீதி கிடைக்க வேண்டும் அதுவரைக்கு நான் சும்மா விடமாட்டன் தூக்கி போட்டு குத்தினார்கள் சுவரில் சாற்றி அடித்தார்கள் சுவர் உடைந்து போய் இருக்கு இவர்க்ளுக்கு யார் அதிகாரம் கொடுத்தது . மருத்துவ உடல் கூற்று அறிக்கையில் எனக்கு சந்தேகம் உள்ளது. எனவே அதற்கான சரியான நீதி கிடைக்க வேண்டும் கைவிலங்கிட்ட எனது அண்ணன் ஐஸ் போதைப்பொருட்களை எவ்வாறு விழுங்குவான் இவர்கள் அனைத்தையும் மூடி மறைக்க பார்க்கின்றதாகவும் குற்றம் சுமத்தினார்.
இந்த நிலையில் இன்று மட்டக்களப்பு நீதிமன்றில் நீதிபதி அறையில் நீதிபதி கருப்பையா ஜீவராணி முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது . இதன் போது குறித்த வழக்கின் சாட்சிகள் சாட்சியம் அளிக்கும் நிலையில் தனது மகனின் மரணகூற்று பரிசோதனையில் சந்தேகம் இருப்பதாகவும் மீண்டும் ஒருமுறை தனது மகனை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் தாயார் நீதிபதி முன்னிலையில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கைது செய்யப்ட இளைஞன் 4 ஜஸ் போதைப் பொருள் பைகளை வாயில் போட்டு விழுங்கியதன் காரணமாக உயிரிழந்துள்ளார் என பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்திருந்தனர் .
அதேவேளை வாழைச்சேனை பொலிஸ் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த தலைமையில் விசேட பொலிஸ்குழு அமைக்கப்பட்டு விசாணை இடம்பெற்று வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.