ரயில்வே ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் வெளியான புதிய தகவல்!
இலங்கை ரயில்வே ஊழியர்கள் இன்று (மார்ச் 05) நள்ளிரவு முதல் முன்னெடுக்க திட்டமிட்டிருந்த காலவரையற்ற பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ரயில்வே லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள், ரயில்வே காவலர்கள் மற்றும் ரயில்வே மேற்பார்வை மேலாளர்கள் ஆகியோரின் தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளவிருந்தன.
தமது சம்பளத்தை குறைப்பதற்கு முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தை நீக்குமாறு கோரியே அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர்.
இருப்பினும் இன்று மாலை இது தொடர்பில் ரயில்வே அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ரயில்வே அதிகாரிகளின் விளக்கத்திற்குப் பிறகு, பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்தத் தீர்மானித்ததாக ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.