தமிழர் பகுதியில் வைரலாகும் வீடியோ
இலங்கையில் தமிழர் பகுதியில் விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாத இருவர் மாட்டினை பயன்படுத்தி உழவு செய்து நெல் விதைத்தமை மற்றும் உழவு இயந்திரத்தை இயக்கியமை தொடர்பான நகைச்சுவை காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவிவருகின்றது.
விவசாயம் என்றால் என்னவேன்றே தெரியாத நபர் ஒருவர், மாட்டின் கயிற்றினை கூட நேர்த்தியாக கட்டாமல், காட்சிகள் திட்டமிட்டவாறு வடிவமைக்கப்பட்டிருப்பதாக சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டுவருகின்றது.
இதேவேளை, பானையில் கட்டப்பட்டிருந்த மாவிலை கூட பொங்கல் பானை அடுப்பில் இருந்த வேளை கருகாமல் இருப்பதை சமூக ஊடகங்களில் இருப்பவர்கள் கிண்டலடித்துக் கொண்டிருக்கிறார்கள்.