விரைவில் சந்திக்கவுள்ள முக்கிய தமிழ் கட்சியின் தலைமைகள்
உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பது தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
நாளை மறுதினம் இந்த சந்திப்பு இடம்பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தம்முடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, குறித்த பேச்சுவார்த்தை தமிழ் தேசிய கட்சிகளுக்கிடையே ஒரு பரந்துப்பட்ட கூட்டணிக்கு வழிவகுக்க வேண்டும் என தாம் வலியுறுத்தியுள்ளதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.