வீதியில் கொண்டிருந்த போதே திடீரென தீப்பற்றியெறிந்த முச்சக்கரவண்டி
கொழும்பு மாநகர சபை அலுவலகத்திற்கு அருகில் வீதியில் பயணித்து கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்து இன்று வெள்ளிக்கிழமை (13) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை
தீ விபத்தின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீ பரவலை கட்டுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறிருப்பினும், முச்சக்கரவண்டியானது முற்றாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.