இலங்கை வந்துள்ள இந்தியாவின் முக்கியஸ்தர்!
இந்திய பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் அமைச்சருமான சுப்ரமணியன் சுவாமி (Subramanian Swamy), கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்றுக்காலை வந்தடைந்தார்.
இந்நிலையில் , விமானச் சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வீ சானக மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப-தலைவரும் பி பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் ஆகியோர் விமானநிலையம் சென்று வரவேற்றனர்.
இலங்கை வந்துள்ள சுப்ரமணியன் சுவாமி (Subramanian Swamy) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், அலரிமாளிகையில் இன்றுமாலை நடைபெறும் நவராத்திரி விழாவிலும் கலந்துகொள்2ளவுள்ளார்.
மேலும் , இலங்கை இராணுவத்தின் 72ஆவது நிறைவையொட்டி நடத்தப்படும் இராணுவ கருத்தரங்கிலும் சுப்ரமணியன் சுவாமி (Subramanian Swamy) உரையாற்றவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.


