பிரதமர் மகிந்தவை சைவத்திற்கு மாற்றிய சுப்ரமணியன் சுவாமி!
இந்துமக்களின் மிக் முக்கிய பண்டிகையான நவராத்திரி விழாவில் பிரமர் மகிந்த நாஜபக்க்ஷ சைவமுறைப்படி தனது பாரியாருக்கு நெற்றியில் குங்குமம் வைத்த புகைப்படம் வைரலாகி வருகின்றது.
நேற்றிரவு அலரிமாளிகையில் இடம்பெற்ற இந்த நவராத்திரி விழாவில் இந்தியாவில் இருந்து வருகைதந்திருந்த இந்திய பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் அமைச்சருமான சுப்ரமணியன் சுவாமியும் (Subramanian Swamy), கலந்துகொண்டிருந்ததுடன் சிறப்புரையும் ஆற்றியிருந்தார்.
அதோடு பல அரசியல் பிரதானிகளும் நவராத்திரி விழாவில் கலந்து சிறப்பித்திருந்ததுடன், நவராத்திரிவிழாவில் இந்து சமயம் சார்ந்த பல கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தது.
நாடளாவிய ரீதியில் பெரும் விமரிசையாக கொண்ட்டாடப்படும் நவராத்திரி விழாவானது, அலரிமாளிகையிலும் மிக சிறப்பாக இடம்பெற்ற நிலையில் அது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.