AI மூலம் மாணவிகள் நால்வரை நிர்வாணப்படுத்திய இரு மாணவர்கள்
இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்குத் தயாராகும் நான்கு பாடசாலை மாணவிகளின் முகத்தில் நிர்வாண உடல்களை AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒட்டவைத்த மாணவர்கள் இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது.
பாடசாலையின் சமூக ஊடக தளங்களில் பரப்பியதாகக் கூறப்படும் இரண்டு சந்தேக நபர்களை இந்த மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஹொரணை நீதவான் சந்தன கலன்சூரிய உத்தரவிட்டார்.
மேலும், இரண்டு மாணவர்களையும் சிறைச்சாலையின் கட்டுப்பாட்டில் உள்ள சிறுவர்கள் தடுப்பு மையத்திற்கு அனுப்புமாறு சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
சிறுமிகளில் ஒருவரின் தந்தை புகைப்படங்களைப் பார்த்து, அது குறித்து பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளர். இதை அடுத்து, சந்தேகத்திற்குரிய இரண்டு மாணவர்களும் கைது செய்யப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.