மீண்டும் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு கல்வியை போன்று அன்பும் அவசியம்!
கொரோனாவால் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்ட பின்னர் பிள்ளைகளை மிகவும் வலுவான அணுகுமுறைகளுடன் மேம்படுத்தும் திசையினை நோக்கி கல்வியினை நகர்த்த வேண்டும் என கண்டி, தேசிய அடிப்படை கல்வி நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் அதுல சுமதிபால தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலைமையை உருவாக்குவது பொற்றோர், ஆசிரியர்களைப் போன்று ஊடகங்கள் உட்பட முழு சமூகத்தினதும் பொறுப்பாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தகவல் திணைக்களம் இன்று (01) ஏற்பாடு செய்திருந்த ஊடக கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே பேராசிரியர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட பேராசிரியர், கொரோனா பரவல் காலப்பகுதியில் பிள்ளைகளின் கல்வியினை போன்று அவர்களின் மனநிலை மட்டத்திலும் ஒரு குறிப்பிட்ட பின்னடைவினை எதிர்நோக்கும் அபாய நிலை உருவாகியுள்ளது.
அதனை வெற்றுக் கொள்ள அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். பாடசாலைகள் மீள திறக்கபட்ட பின்னர் பிள்ளைகள் வருகை தந்தவுடன் மிகவும் அன்பாக அவர்களின் மனநிலையினை புரிந்துகொண்டு ஆசிரியர்கள் செயல்படுவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
மேலும் இக்காலப்பகுதியில் தமது பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர்கள் மிகவும் பொறுமையாகவும் புரிதலுடனும் செயற்படுவது அவசிமானதாகும்.