பகிடிவதையால் தற்கொலைக்கு முயன்ற மாணவி ; பகீர் சம்பவம்
கொழும்பு - குளியாப்பிட்டி தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொழில்நுட்பக் கல்லூரிக்கு அருகிலுள்ள ஆற்றில் நேற்று (02) மதியம் குறித்த மாணவி குதித்ததாகவும், அருகில் இருந்த சிலரால் அவர் மீட்கப்பட்டு குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸார் நடத்திய விசாரணையில், பகிடிவதை சம்பவத்தால் மாணவி தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது.
மாணவி தற்போது குளியாப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குளியாப்பிட்டி பொலிஸார் , சம்பவம் தொடர்பாக தொழில்நுட்பக் கல்லூரியின் நான்கு மாணவர்களைக் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை , குளியாப்பிட்டி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.