ஏறாவூரில் திருடி ஓட்டமாவடியில் விற்பனை; வசமாக சிக்கிய நபர்
Sri Lanka Police
Pomegranate
Batticaloa
By Sulokshi
ஏறாவூரிலுள்ள பழவகைக் கடையொன்றில் மாதுளம் பழங்களை பெட்டியுடன் சூசகமாக திருடிய நபர் அதனை ஓட்டமாவடியிலுள்ள பழவகைக் கடை ஒன்றில் விற்பனை செய்ய முயன்றவை கைதாகியுள்ளார்.
ஓட்டமாவடியைச் சேர்ந்த பழவகைக் கடை உரிமையாளர் குறித்த நபர் மீது சந்தேகம் கொண்டதால் திருடன் வசமாக மாட்டியுள்ளார்.
இது தொடர்பில் வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் பல திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விடுதலையானவர் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US