இலங்கையில் அவசரகாலச் சட்டம்: கேள்வி எழுப்பிய கனேடிய முக்கியஸ்தர்!
இலங்கையில் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் (Gotabaya Rajapaksa) தீர்மானம் குறித்து இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் (David Mckinnon) டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை முழுவதும் கடந்த வாரங்களாக, குடிமக்கள் அமைதியான முறையில் கருத்துச் சுதந்திரத்தில் வெளிப்படுத்தி வருவதாகவும், மேலும் இது நாட்டின் ஜனநாயகத்திற்கு கிடைத்த பெருமையாகும் என டேவிட் மெக்கின்னன் தெரிவித்துள்ளார்.
Over the past weeks, the demonstrations across #SriLanka have overwhelmingly involved citizens enjoying their right to peaceful freedom of expression, and are a credit to the country’s democracy. It’s hard to understand why it is necessary, then, to declare a state of emergency.
— David McKinnon (@McKinnonDavid) May 6, 2022
அப்படியானால், அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்துவது என்ன அவசியம் என்பதைப் புரிந்துகொள்வது கடினமாக இருப்பதாக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டுவீட் செய்துள்ளார்.