தமிழகத்தில் தஞ்சம்கோரும் இலங்கையர்கள் குறித்து முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு
தமிழகத்துக்கு வரும் இலங்கைத் தமிழர்களுக்கு, விரைவில் ஒரு விடிவு காலத்தை தமிழக அரசு ஏற்படுத்தி கொடுக்கும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்று உரையாற்றியபோது அவர் இதனை கூறினார். இலங்கைத் தமிழர்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி உள்ள சூழலில், இலங்கைத் தமிழர்கள் தமிழகம் வருகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து நேற்று அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடியதுடன், மத்திய அரசின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு இதனை எவ்வாறு கையாள வேண்டும் என்ற சட்டரீதியான கலந்துரையாடல் இடம்பெறுகின்றதாகவும் தமிழக முதலமைச்சர் தெரிவித்தார்.
இந்நிலையில் அவர்களுக்கும் விரைவில் இதற்கு ஒரு விடிவு காலத்தை தமிழக அரசு ஏற்படுத்தித் தரும் எனவும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.