இலங்கையர் படுகொலை: பாகிஸ்தான் அமைச்சர் வெளியிட்ட கருத்தால் எழுந்த பெரும் சர்ச்சை!
பாகிஸ்தானியில் இலங்கையருக்கு ஏற்பட்ட கொடூரத்திற்கு அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் (Pervez Khattak) இலங்கை மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர (Sarath Weerasekara) இன்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இதுகுறித்து தெரிவிக்கையில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் அறிவிப்பு ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், சாதாரண சம்பவம் என அவர் கருத்து வெளியிட்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது. அது உண்மையெனில் அதனை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
மேலும், இது தொடர்பில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் இலங்கை மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும். தான் வெளியிட்ட கருத்தை மீளப்பெற வேண்டும். என்றார் சரத் வீரசேகர. இது மோசமான சம்பவம் என்று சொல்ல முடியாது.
இதேவேளை, உணர்ச்சியில் இது போன்ற செயல்கள் சில நேரங்களில் நடந்துவிடுகிறது என்று கூறி, இலங்கையர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் நியாயப்படுத்தியுள்ளமை பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது.