நடுவானில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; பாதியில் தரையிறக்கம்
ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்தோனேசியாவின் மெடான் விமானநிலையத்தில் அவசரஅவசரமாக தரையிறங்கியது.
கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு நேற்று பயணித்த போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நடுவானில் விமானம் இந்தோனேசியாவிற்கு திருப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பயணித்த போது தொழில்நுட்ப கோளாறு
விமானத்தை பரிசோதித்த இந்தோனேசிய தொழில்நுட்பவியலாளர்கள் தொழில்நுட்ப கோளாறினை சரி செய்வதற்கு மேலதிகநேரம் தேவைப்படும் என தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து இலங்கையிலிருந்து புறப்பட்ட ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸின் தொழில்நுட்ப குழுவினர் இந்தோனேசியா சென்றுள்ளனர்.
இதேவேளை இந்தோனேசியாவில் சிக்குண்டுள்ள பயணிகளை சிங்கப்பூர் கொண்டு சென்று சேர்ப்பதற்காக இலங்கையிலிருந்து ஸ்ரீலங்கன்எயர்லைன்ஸ் விமானமொன்று இந்தோனேசியா செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேவேளை தாம் நீண்டநேரம் காத்திருக்கவேண்டியுள்ளதாகவும்,போதிய வசதிகள் இல்லை போதிய தகவல்கள் இல்லை என இந்தோனேசியாவில் உள்ள குறிப்பிட்ட விமானத்தின் பயணிகள் தெரிவித்துள்ளனர்.