வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளாரா ஜனாதிபதி கோட்டாபய?
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பு நகர மண்டபத்திற்கு முன்பாக நடைபெற்ற கட்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் பாரிய போராட்டங்கள் காரணமாக இராணுவப் பிரிவுகளை தமக்கு நெருக்கமாகக் கொண்டுவர ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அதேவேளை , ராஜபக்ச குடும்பம் நாட்டை ஆள முடியாது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும், ராஜினாமா செய்து நாட்டை கட்டியெழுப்பக்கூடிய அரசாங்கத்தை உருவாக்க அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் அனுர திஸாநாயக்க கூறினார்.