மீண்டும் தனிமைப்படுத்தல் உத்தரவு; மக்களுக்கு எச்சரிக்கை
பல்பொருள் அங்காடிகளிலும், பேருந்துகளிலும் தேவையில்லாமல் மக்கள் தேவையில்லாமல் குடும்பம் குடும்பமாக கூடுவதை அவதானிக்க முடிகிறதாகவும் இதன் காரணமாக மே மாதத்தில் இருந்து தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்க வேண்டிய நிலை உருவாகும் எனவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண எச்சரித்துள்ளார்.
சித்திரை புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கடந்த இரு நாட்களில் பல பகுதிகளில் வரம்பை மீறி 500 முதல் 1,000 பேர் வரை ஒன்று கூடியமையை அவதானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
பொதுமக்கள் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் செயற்படுவதால் ஏற்படும் விளைவுகளை அடுத்த சில நாட்களில் பொதுமக்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் உபுல் ரோஹன குறிப்பிட்டார்.
அத்துடன் இந்த நடவடிக்கைகள் காரணமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றுபவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.