கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
கொரோனா தொற்றால் பாதிப்பட்டவர்களில் குணமடைந்து வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் செல்கிறது. இதனைக் கட்டுக்குள் கொண்டு வர இலங்கை அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் ஆயிரத்து 145 பேர் பூரணமாக குணமடைந்து, இன்று வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 8 ஆயிரத்து 802 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இந்த கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் இதுவரையில் 868 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.